2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமர்ந்து பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான மாவட்ட சதவிகிதம் இன்று (21) வெளியிடப்பட்டது.
அதேநேரம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அடுத்த மாதம் பல்கலைக்கழக சேர்க்கைக்கான இசட் மதிப்பெண்களை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் சதவீதம் குறித்த மேலதிக தகவல்களை www.ugc.ac.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். (யாழ் நியூஸ்)