VIDEO: சீனாவை போன்று நாட்டில் ஃபேஸ்புக் உட்பட பல சமூக ஊடகங்களை தடை செய்ய உத்தேசம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: சீனாவை போன்று நாட்டில் ஃபேஸ்புக் உட்பட பல சமூக ஊடகங்களை தடை செய்ய உத்தேசம்!

ஃபேஸ்புக் மற்றும் இணையதளங்கள் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்புக்களுக்கு ஒழுங்குபடுத்த எந்த சட்டமும் இல்லை என்பதால், அவற்றை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர், சீனாவில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார.

"நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கு சமூக ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும். இந்த சூழ்நிலையில் நாம் இவற்றை முறையாக ஒழுங்குபடுத்த சட்டங்களை கொண்டு வர வேண்டும். நான் அமைச்சரவையில் ஒவ்வொரு நாளும் இதைப் பற்றி பேசுகிறேன்.

நாங்கள் கடையைத் திறந்து வைத்தோம். ஏதாவது நடக்கும்போது தான், ​​என்ன செய்வது என்று பார்க்கிறோம்.

இந்த சமூக ஊடகங்களை நாட்டில் தடை செய்ய வேண்டும். அல்லது அவற்றை ஒழுங்குபடுத்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பாருங்கள், சீனாவில் சமூக ஊடகங்கள் இல்லை. அங்கு சமூக ஊடகங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.