நாட்டில் பல உயர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று - சுகாதார தரப்பினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் பல உயர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று - சுகாதார தரப்பினர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையின் போது உயர் அதிகாரிகள் பலர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நாளாந்தம் கொரோனா இறப்புக்கள் 200 ஐ நெருங்கியுள்ளதுடன், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளமை பெரும் நெருக்கடியாக உருவாகியிருக்கிறது.

இந்தநிலையில், முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹணவும், விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்சன பத்திரன ஆகியோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தேசிய தேர்தல் ஆணையகத்தின் தலைவர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாது இந்த மாதத்தில் மட்டும்ம் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

அதேபோன்று, இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.