நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன!

தேவை ஏற்படின் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

உலகின் எந்த வைரஸ் மாறுபாட்டுக்கும் எதிரான சிறந்த வழி தடுப்பூசிகள் தான் எனக் குறிப்பிட்ட அவர்,

இலங்கையில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் 95-, 96% பாதுகாப்பானவையென்றும் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் முழுமையான நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகுமென கூறினார்.

அதேநேரம், இதுவரை 30 வயதுக்கும் மேற்பட்ட 96 வீதமானவர்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியும் 25 வீதமானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.