அடுத்த ஆண்டுக்கான வாகன இறக்குமதிக்கான தடையை தொடர அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன இறக்குமதிக்கு தடை விதிப்பதன் மூலம், அரசாங்கத்தால் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்க முடிந்துள்ளதாகவும், கட்டுப்பாடுகளைத் தொடரும் பட்சத்தில் இருப்புக்களை அதிகரிக்க உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்நிய செலாவணி மாற்று விகிதத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், மார்ச் 2020 இல் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வாகனங்களை இறக்குமதி செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)
வாகன இறக்குமதிக்கு தடை விதிப்பதன் மூலம், அரசாங்கத்தால் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்க முடிந்துள்ளதாகவும், கட்டுப்பாடுகளைத் தொடரும் பட்சத்தில் இருப்புக்களை அதிகரிக்க உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்நிய செலாவணி மாற்று விகிதத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், மார்ச் 2020 இல் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வாகனங்களை இறக்குமதி செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)