நாட்டில் தீவிரமாக அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று! - நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா மரணங்கள் நேற்று பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் தீவிரமாக அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று! - நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா மரணங்கள் நேற்று பதிவு!

நாட்டில் மேலும் 1,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 412,370 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றையதினம் 3,522 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று (26) 4,602 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் (25) மேலும் 209 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரை 8,157 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இன்றைய தினம் 2139 நபர்கள் குணமடைந்தும் உள்ளனர். 
 (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.