இவ்வாறான இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இவ்வாறான இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல தடை!

சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2021 ஜூலை 31ம் திகதி முதல் அமுலாகியுள்ள நடைமுறையின்படி, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா, கோவ்ஷீல்ட் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரம் பிரான்ஸிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த பட்டியலில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி,
  • ஃபைசர் - இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்டு 2 வாரங்களுக்குப் பின்னர்
  • மாடர்னா -இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்டு 2 வாரங்களுக்குப் பின்னர்
  • அஸ்ட்ராஜெனெகா மற்றும் கோவ்ஷீல்ட் - இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்டு 2 வாரங்களுக்குப் பின்னர்
  • ஜான்சன் அண்ட ஜான்சன் - முதல் அளவு செலுத்திக்கொண்ட 4 வாரங்களுக்குப் பின்னர் 
பிரான்சிற்குள் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.