உரை பையில் மேலுமொரு பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உரை பையில் மேலுமொரு பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நேற்று (05) இரவு பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனைப் பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உரை பையில் கட்டப்பட்ட பார்சலை ஒருவர் கொண்டு வந்து வைத்து விட்டு பத்து நிமிடத்தில் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி விட்டுச்சென்றவர் வராத காரணத்தினால் வர்த்தக நிலைய உரிமையாளர் சந்தேக நபருக்க தொலைபேசி அழைப்பை விடுத்த போது அதை வைத்துக் கொள்ளுங்கள் நான் வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

குறித்த பொதி தொடர்பில் சந்தேகம் கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸ் நிலையம் சென்று செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரும் வர்த்தக நிலைய உரிமையாளரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட குடும்பப்பெண் வாழைச்சேனை, அல்லாப்பிச்சை வீதியைச் சேர்ந்த முகம்மட் ஹனீபா சித்தி லைலா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-மட்டக்களப்பு குகதர்ஷன்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.