வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ்!


வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வேண்டுகோளின் பிரகாரம்  தடுப்பூசி  சான்றிதழ் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனிநபர் தடுப்பூசி அட்டை, கடவுச்சீட்டு, உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில்  சுகாதாரவைத்திய அதிகாரியினால்  தடுப்பூசி  சான்றிதழ் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது அதிகாரப்பூர்வ தடுப்பூசி சான்றிதழாக ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி சான்றிதழ் இன்றி பிரவேசிப்பதற்கு ஒரு சில நாடுகள் தடைவிதித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் உலகின் பல நாடுகள் தடுப்பூசியினை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களுக்கு பயண அனுமதியினை வழங்கியுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.