ஆசிரியர்களின் போராட்டத்துடன் கைகோர்க்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசிரியர்களின் போராட்டத்துடன் கைகோர்க்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆசிரியர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக அவர்களின் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள மற்ற கட்சிகளை விட ஆசிரியர்கள் ஸ்ரீ.ல.சு.க உடன் நெருக்கமாக உள்ளார்கள் என்று கட்சியின் துணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா தெரிவித்தார்

ஆசிரியர்களின் பிரச்சினையை தனது சொந்த பிரச்சினையாக கருதுவதாகவும், ஆசிரியர்களின் போராட்டம் மிகவும் நியாயமானது என்றும் கூறினார்.

இருப்பினும், அவர் மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்து போராடும் போராட்டத்திற்கு எதிரானவர் என்றும், மாணவர்களை அவ்வாறு பார்க்காமல் போராடுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.