கடந்த 15 நாட்களில் 600 கொரோனா மரணங்கள் - மேலும் முக்கிய தகவல்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடந்த 15 நாட்களில் 600 கொரோனா மரணங்கள் - மேலும் முக்கிய தகவல்கள்!

  • கடந்த 15 நாட்களுக்குள் இலங்கையில் 600 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • நேற்று (23) முடிவடைந்த கடைசி 15 நாட்களில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 611 ஆக பதிவாகியுள்ளது, இதில் 353 ஆண்கள் மற்றும் 258 பெண்கள் அடங்குவர். 
  • கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்று காரணமாக 30 வயதிற்குட்பட்ட 5 நபர்கள் இறந்துள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • மேலும் இக்காலகட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 30 முதல் 59 வயதுக்குட்பட்ட 147 பேர் இறந்துள்ளனர்.
  • கடந்த 15 நாட்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் 459 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றுக்கு இலக்காகி வயதானவர்களுக்கு தொடர்ந்து இறப்பு ஆபத்து அதிகம் என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • நாட்டில் இதுவரை 4,002 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 
  • இவற்றில், முதல் அலையில் 13 இறப்புகளும், இரண்டாவது அலைகளில் 596 இறப்புகளும் தற்போதைய மூன்றாவது அலையில் 3,393 இறப்புகளும் பதிவாகியுள்ளன. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.