நான்கு ஆண் மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிபர் சிக்கினார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான்கு ஆண் மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிபர் சிக்கினார்!


இரத்தினபுரி மாவட்டத்தின் இரக்குவானை பொத்துபிட்டியில் உள்ள பாடசாலையின் அதிபர் 04 ஆண் மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்று (09) கைது செய்யப்பட்ட அதிபர் 43 வயதான திருமணமாகாதவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 


பாதிக்கப்பட்ட மாணவர்கள் 11 முதல் 13 வயதுக்குட்பட்ட அதே பாடசாலையை சேர்ந்த ஆண் மாணவர்களாவர்.


பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களின் நடத்தைகளில் மாற்றத்தைக் கண்டறிந்த பின்னர் இது தொடர்பாக பொலிசாருக்கு தெரிவித்தனர்.


பின்னர் இடம்பெற்ற விசாரணையின் போது மாணவர்கள் அதிபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்தது. 


அதன்படி பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதிபரை இரக்குவானை பொலிஸார் கைது செய்தனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.