தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் 14 ஆம் திகதி நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்றும், மக்கள் நடமாட்டத்தில் குறிப்பிடத்தக்க கட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் பல சுகாதாரத் துறைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனவே, தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரை ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர் என்றார். (யாழ் நியூஸ்)