PHOTOS: பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நேரத்தில் ட்ரோன் கமராக்கள் மூலம் நடமாடிய இளைஞர்களை மடக்கிப்பிடித்த பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நேரத்தில் ட்ரோன் கமராக்கள் மூலம் நடமாடிய இளைஞர்களை மடக்கிப்பிடித்த பொலிஸார்!

விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் கமரா பயன்படுத்தி மன்னார் பகுதிகளில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை பொது மக்களின் நடமாட்டத்தை கண்காணித்துள்ளனர்.

இதன் போது கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 15 பேர் வரை இன்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இருந்து விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் கமரா பயன்படுத்தி மன்னார் நகர் பகுதிகளில் பொது மக்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.


இதன் போது மைதானங்களில் இளைஞர்கள் கூடி விளையாடியமை, வீதிகளில் கூடி நின்றமை ஆகியவை ட்ரோன் கமராவின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு மன்னார் பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் கமரா பயன்படுத்தி மன்னார் பகுதிகளில் பொது மக்களின் நடமாட்டம் கண்காணிக்கும் நடவடிக்கை தொடரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறி அனுமதி இன்றி வெளியில் பயணிப்போர் மற்றும் வீதிகளில் அநாவசியமான முறையில் நடமாடுபவர்களை கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.