கொரோனா பரவலை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் அஸ்டெர்செனிகா தடுப்பூசி சிலவற்றை இலங்கைக்கு வழங்க முடியுமா என்று இலங்கை அரசு கொங்கோ நாட்டு அரசிடம் கேட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இந்த கோரிக்கையை கொங்கோ ஜனாதிபதியிடம் சிறப்பு கோரிக்கை செய்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்டெர்செனிகா தடுப்பூசிகள் சிலவற்றை கொங்கோ அரசாங்கத்திடம் கொள்வனவு செய்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இலங்கையில் அஸ்டெர்செனிகா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்க இலங்கை அரசிடம் தடுப்பூசிகள் குறைபாடாக இருப்பதினாலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது கொங்கோ அரசிடம் 1.3 மில்லியன் தடுப்பூசிகள் மேலதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசானது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் இது போன்ற கடிதங்களை அனுப்பியுள்ளது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இந்த கோரிக்கையை கொங்கோ ஜனாதிபதியிடம் சிறப்பு கோரிக்கை செய்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்டெர்செனிகா தடுப்பூசிகள் சிலவற்றை கொங்கோ அரசாங்கத்திடம் கொள்வனவு செய்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இலங்கையில் அஸ்டெர்செனிகா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்க இலங்கை அரசிடம் தடுப்பூசிகள் குறைபாடாக இருப்பதினாலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது கொங்கோ அரசிடம் 1.3 மில்லியன் தடுப்பூசிகள் மேலதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசானது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் இது போன்ற கடிதங்களை அனுப்பியுள்ளது.