விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!


பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ், இலங்­கையில் தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் அமைப்­புக்­களில் பல, தம் மீதான தடையை மீள் பரி­சீ­லனை செய்­யு­மாறு கோரி ஜனா­தி­ப­திக்கு தனித் தனி­யாக கோரிக்கை கடி­தங்­களை அனுப்­பி­யுள்­ளன. நேற்று மாலை வரை மூன்று அமைப்­புக்கள் இவ்­வாறு மீள் பரி­சீ­லனை கோரி கடிதங்களை அனுப்­பி­யுள்­ளமை உறுதி செய்­யப்பட்ட நிலையில், மேலும் சில அமைப்­புக்கள் அதற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடுபட்டிருந்­த­மையை உறுதி செய்ய முடிந்­தது.

தடையை எதிர்த்து உயர் நீதி­மன்றில் வழக்குத் தொடுக்க முன்னர் இவ்­வா­றான ஒரு மீள் பரி­சீ­லனை தொடர்பில் ஜனா­தி­ப­தி­யிடம் கோரியுள்­ள­தாக, மீளாய்வு கோரி கடிதம் அனுப்­பி­யுள்ள அமைப்பொன்றின் முக்­கி­யஸ்தர் விடி­வெள்­ளி­யிடம் தெரி­வித்தார்.

அதன்­படி CTJ எனும் சிலோன் தெளஹீத் ஜமாஅத், ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ), அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ) ஆகிய அமைப்­புக்கள் ஜனா­தி­ப­திக்கு மீள் பரி­சீ­லனை கோரி கடி­தங்­களை அனுப்­பி­யுள்­ளன.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ) ஜம்­மி­யதுல் அன்­ஸாரி சுன்­னதுல் மொஹ­ம­தியா (ஜே.ஏ.எஸ்.எம்.) போன்ற அமைப்­புக்­களும் இவ்வாறான முயற்­சி­களில் ஈடு­பட்­டு­ள்ள­தாக அறிய முடி­கின்­றது.

நாட்டின் சமா­தா­னத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு, பொது­மக்கள் ஒழுங்கு மற்றும் சட்­ட­வாட்­சியின் நலனில் அர­சாங்­கத்தின் முயற்­சி­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக அடிப்படைவாதத்­துடன் தொடர்­பு­டைய 11 அமைப்­பு­களை தடை செய்வ­தாக கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி அதி­வி­சேட வர்த்­த­மா­னியை வெளி­யிட்டு அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) சட்­டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் 2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒழுங்கு விதி­க­ளுக்­க­மைய குறிப்­பிட்ட 11 அமைப்­பு­களும் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக வர்த்­த­மானி அறி­வித்­தலில் சுட்டிக்காட்டப்­பட்­டுள்­ளது.

-எம்.எப்.எம்.பஸீர்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.