இலங்கையில் நேற்றைய தினம் (29) ஒரே நாளில் 42 கொரோனா மரணங்கள் பதிவாகின.
இதுவே இதுவரையில் ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள்.
இதில், உக்கல்பொட எனும் பகுதியை சேர்ந்த 35 வயதான பெண்ணொருவரும், நிட்டம்புவ பகுதியை சேர்ந்த 42 வயதான ஆணொருவரும் அடங்குவர்.
இந்நிலையில், நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,405 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரம் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு மேலும் 2,882 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 180,593 ஆக உயர்ந்தது.