இலங்கையில் இன்றைய தினம் (08) புதிதாக 1,896 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் 06 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள், ஏனைய அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதற்கமைய இதுவரை இனம்காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 123,234 ஆக அதிகரித்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 103,098 பேர் குணமடைந்துள்ளதோடு, 19,372 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை வரை 1,335 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இதேவேளை கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 764 ஆக அதிகரித்துள்ளது.