நாடளாவிய ஊரடங்கு? போலி செய்தியை வெளியிட்ட யுடியூப் அலைவரிசை மீது விசாரணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடளாவிய ஊரடங்கு? போலி செய்தியை வெளியிட்ட யுடியூப் அலைவரிசை மீது விசாரணை!


இன்று இரவு 12 நள்ளிரவு முதல் மே 17 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று கூறி போலி செய்திகளை வெளியிட்ட யூடியூப் சேனலுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் இச்செய்தி பரவலாக பகிரப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான போலி செய்தி குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி.அஜித் ரோஹன தெரிவித்தார்.

"நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பற்றி எந்த உண்மை தன்மையும் இல்லை, பொது மக்களிடையே பீதியை உருவாக்கும் இவ்வாறான குற்றவாளிகள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்று டிஐஜி அஜித் ரோஹன மேலும் கூறினார்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.