
மக்கள் மிக அவதானமாக செயற்படாவிட்டால் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவும் எச்சரிக்கை சூழ்நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரிவு தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்றுவரை நாடளாவிய ரீதியில் 14 மாவட்டங்களில் 06 பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 98 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.