அனைத்து நிர்வாக அதிகாரிகளிடமும் உள்நாட்டலுவலகள் அமைச்சு முன்வைத்துள்ள கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து நிர்வாக அதிகாரிகளிடமும் உள்நாட்டலுவலகள் அமைச்சு முன்வைத்துள்ள கோரிக்கை!


அடுத்தக்கட்ட தடுப்பூசி செலுத்தலின்போது முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அதுவரை எவ்வித தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்றும் அனைத்து நிர்வாக அதிகாரிகளிடம் உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.


அதற்கமைய, அடுத்தக்கட்ட தடுப்பூசி செலுத்தலின்போது அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் ஏனைய கள உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.


இதேவேளை, இன்று (25) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்தார்.


கொரோனா தடுப்பூசி வழங்கும் நடைமுறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.