நுவரெலியாவில் இன்று (01) கண்டய்னர் வண்டி மற்றும் முச்சக்கர வண்டி இடையே நேருக்கு நேர் ஏற்பட்ட விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கல பகுதியிலே இன்று பிற்பகல் இந்த கோர விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர் திசையில் வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மோதிய பின்னர் கண்டய்னர் வண்டி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
கண்டய்னர் வண்டி ஓட்டுநருக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய ஓட்டுநரை கைது செய்ய பொலிசார் தீவிர தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கல பகுதியிலே இன்று பிற்பகல் இந்த கோர விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர் திசையில் வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மோதிய பின்னர் கண்டய்னர் வண்டி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
கண்டய்னர் வண்டி ஓட்டுநருக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய ஓட்டுநரை கைது செய்ய பொலிசார் தீவிர தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.