CCTV : வேகமாக பயணித்த வேன் - பல வாகனங்களுடன் மோதி விபத்து : பலர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CCTV : வேகமாக பயணித்த வேன் - பல வாகனங்களுடன் மோதி விபத்து : பலர் காயம்!

சிலாபம்-புத்தாலம் பிரதான வீதியில் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று நேற்று (31) மாலை பதிவானது. 

வேன், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட நான்கு வாகனங்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளன.

புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் முச்சக்கர வண்டியுடன் மோதியதாகக் தெரிவிக்கப்பட்டது, அதன் பின்னர் வேன் வண்டி மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதியதும், மோட்டார் சைக்கிள் வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருந்த சைக்கிள் மீது கவிழ்ந்தது.

சைக்கிளில் வந்த தம்பதியினர் உடனடியாக சைக்கிளிலிருந்து குதித்து விபத்தை தவிர்த்து தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொண்டனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 6 நபர்களும் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேனின் ஓட்டுநர் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து ஆரச்சிகட்ட்டுச பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.