இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்ய அரசு விதித்துள்ள புதிய விதிமுறை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்ய அரசு விதித்துள்ள புதிய விதிமுறை!


வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குள் இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் புதிய விதிகளை விதித்துள்ளது.


புதிய விதி­க­ளுக்­க­மைய இறக்­கு­மதி செய்­வ­தற்கு முன்பு அதற்­கான அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். முன் அ-னு­ம­தி­யின்றி இஸ்­லா­மிய நூல்கள் இறக்­கு­மதி செய்ய முடி­யாது.


நிறு­வ­னங்­களோ, அமைப்­பு­களோ,தனி­ந­பர்­களோ இஸ்­லா­மிய நூல்களை இறக்­கு­மதி செய்­வ­தென்றால் அதன் பிர­தி­யொன்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் ஒப்படைக்கப்­ப­ட­ வேண்டும்.


அத்­தோடு நூலின் பெயர், நூலின் உள்­ள­டக்கம், ஆசி­ரி­யரின் பெயர், அவ­ரது பின்­னணி, நூலில் தீவி­ர­வாத கருத்­துக்கள் உள்ளடங்கியுள்ளனவா-? அந்நூல் வெளி­நா­டு­களில் தடை செய்யப்பட்­டுள்­ளதா? எந்த நாட்­டி­லி­ருந்து நூல் இறக்­கு­மதி செய்யப்பட­வுள்­ளது. எனும் விப­ரங்கள் இறக்­கு­ம­தி­யா­ளர்­களால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும்.


மேலு­ம் புத்­தகம் விலை கொடுத்து கொள்­வ­னவு செய்யப்படுகின்றதா? அல்­லது நன்­கொ­டை­யாகக் கிடைக்கப் பெறுகி­றதா? நன்­கொ­டை­யென்றால் நன்­கொ­டை­யாக வழங்குபவரின் விப­ரங்கள் என்­ப­னவும் தெரி­விக்­கப்­ப­ட­வேண்டும்.


இந்த விதிகள் தொடர்பில் முஸ்லிம் சம­ய­பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ளர்ஏ.பி.எம். அஷரப் விளக்கமளிக்கையில்:


இஸ்­லா­மிய நூல்கள் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வ­தற்கு குறிப்­பிட்ட விப­ரங்­க­ளுடன் விண்­ணப்பம் கிடைத்­ததும் அது தொடர்பில் ஆராய்ந்து புத்­தகம் இறக்­கு­மதி செய்­வ­தற்கு தகு­தி­யு­டை­ய­தென்றால் அது தொடர்­பான சிபா­ரி­சினை திணைக்­களம் புத்­த­சா­சன மற்றும் மத­வி­வ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­சிற்கு வழங்கும்.


புத்­த­சா­சன மற்றும் மத­வி­வ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சு பரி­சீ­லனை செய்து பாது­காப்பு அமைச்­சுக்கு தனது சிபாரிசினை வழங்கினால் மாத்திரமே இஸ்லாமிய புத்தகங்களை நாட்டுக்குள் இறக்குமதி செய்ய முடியும்.


இந்­ந­டை­முறை தற்­போது அமு­லுக்கு வந்­துள்­ளது. எனவே இறக்­கு­ம­தி­யா­ளர்கள் இத­னைப்­பின்­பற்­ற­வேண்டும் என்றார்.


-ஏ.ஆர்.ஏ.பரீல் - விடிவெள்ளி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.