களுத்துறை சிறையில் இருந்து கைது ஒருவர் தப்பியோட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

களுத்துறை சிறையில் இருந்து கைது ஒருவர் தப்பியோட்டம்!


களுத்துறையில் கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


களுத்துறை வடக்கு சிரிலந்தவத்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு இன்று (14) மாலை தப்பிச் சென்றுள்ளார்.


கொழும்பு சங்ஸ்கா வீதியைச் சேர்ந்த காமினி வசந்த என்ற நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.


சட்டவிரோதமான முறையில் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த நபரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சிறைச்சாலைக் கட்டடப் பகுதியொன்றை துப்புரவு செய்து கொண்டிருந்த போது இந்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.


சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.