பொதுமக்களை அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்திருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள இராணுவதளபதி சவேந்திர சில்வா அதிகளவு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படும்பகுதிகள் முடக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.
பலநாட்களிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்துவைத்துக்கொண்டு தயாராகயிருப்பது சிறந்தது என தெரிவித்துள்ள இராணுவதளபதி எனினும் எதிர்வரும் நாட்களில் கண்டுபிடிக்கப்படவுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையே இதனை தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாங்கள் மக்களை மிரட்ட வேண்டிய அவசியமோ அல்லது உண்மையை மறைக்க வேண்டிய தேவையோ இல்லை என தெரிவித்துள்ள சவேந்திர சில்வா கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் கிசிச்சை நிலையங்களை அதிகரிக்க இராணுவம் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.