தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவனயீனமாக பயணித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நால்வரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர்கள் இன்று (13) காலை நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவினரால் குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.