50 ரூபாயுடன் பாடசாலை சென்ற 15 வயது மாணவி மாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

50 ரூபாயுடன் பாடசாலை சென்ற 15 வயது மாணவி மாயம்!

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பிரதேசத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது சிறுமி ஒருவர் நேற்றைய தினம் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி பாடசாலைக்கு சென்று இரவு வரை வீடு திரும்பவிலலை உன அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9 இல் கல்வி கற்றுவரும் 15 வயதுடைய சிறுமி சம்பவதினமான நேற்று வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்று பின் பாடசாலை முடிவடைந்து மாலை வரை வீடு திரும்பாததை அடுத்து உறவினர்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர்.

குறித்த சிறுமி பாடசாலைய முடிவடையும்வரை பாடசாலையில் இருந்துள்ளதாகவும் பின்னர் பாடசாலை முடிவடைந்த பின்னர் பாடசாலையைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் பாடசாலைக்கு செல்லும்போது பாடசாலை பையில் உடைகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் 50 ரூபா பணம் தாயிடம்வாங்கிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.