ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினால் தகர்க்கப்பட்ட பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்ய 123 நிறுவனங்கள் போட்டி?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினால் தகர்க்கப்பட்ட பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்ய 123 நிறுவனங்கள் போட்டி?


நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) எனும் தீவிரவாத குழுவால் தகர்க்கப்பட்ட மொசூலின் பெரிய பள்ளிவாசலான அல் நூர் பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்யும் போட்டியில் எகிப்து கட்டடக்கலைஞர்கள் குழு ஒன்று வெற்றி பெற்றுள்ளது.


மொசூல் நகரை கைப்பற்ற அரச படை முன்னேறியபோது 2017 ஜூன் மாதத்தில் இந்தப் பள்ளிவாசலை ஐ.எஸ் வெடிகுண்டு வைத்து தகர்த்தது.


இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐ.எஸ் தீவிரவாத குழு தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி இந்த பள்ளிவாசலில் இருந்தே, தன்னிச்சையாக கலீபத் ஒன்றை அறிவித்திருந்தார்.


மொசூல் நகரை புத்துயிர்பெறச் செய்யும் ஐ.நா திட்டதின் கீழே இந்தப் பள்ளிவாசல் புனரமைக்கப்படவுள்ளது.


பள்ளிவாசலை வடிவமைப்பது தொடர்பில் 123 நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில் எகிப்தின் எட்டு கட்டடக்கலைஞர்களின் வடிவமைப்பு வெற்றி பெற்றுள்ளது.


ஒன்பது மாதங்கள் வரை நீடித்த மொசூல் நகர மோதலால் அந்த நகர் முற்றாக அழிந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்தனர்.


இந்நிலையில் மொசூல் பள்ளிவாசலை புனரமைப்பது அந்த நகரின் மீள் கட்டுமானத்தின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுவதாக ஐ.நா கலாசார நிறுவனமான யுனெஸ்கோவின் தலைவர் அவுட்ரே அசூலாய் தெரிவித்தார்.


மேலும் இந்த ஆண்டு இறுதியில் பள்ளிவாசல் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.