ஹஜ்ஜுல் அக்பரை கைது செய்தமைக்கான காரணங்களை விளக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹஜ்ஜுல் அக்பரை கைது செய்தமைக்கான காரணங்களை விளக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர்!

hajjul akbar arrested

இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரங்களை முன்னெடுத்தமை தொடர்பில் ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,


நாட்டில் வஹாபி வாதம் மற்றும் ஜிஹாத் தொடர்பான கருத்துக்களை பரப்பியமை தொடர்பில் தெமட்டகொடை பகுதியில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாவனெல்லை – முருதவெல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் என்பவராவர்.



ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பினால் வெளியிடப்படும் ‘அல் ஹஸனாத்’ சஞ்சிகையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அடிப்படைவாத எண்ணங்களை தோற்றுவிக்கும் வகையில் குறித்த சந்தேக நபர் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.


மேலும் இவர் மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் உறவினர் என்பது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.


$ads={1}


இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் தொடர்ச்சியாக கருத்துகளைத் தெரிவித்து வந்தமை மற்றும் அடிப்படைவாத கருத்துக்களை பரப்பியமை தொடர்பில் குறித்த சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றார்.


-செ.தேன்மொழி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.