மேலதிக வகுப்புகள் நடத்துவது தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலதிக வகுப்புகள் நடத்துவது தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவிப்பு!


மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ் இன்று தெரிவித்தார்.


மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படாதிருந்த 5,11,13 தர வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார்.


இதற்கான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்து மூலமான அனுமதி நேற்று (23) கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.


நாடு முழுவதிலும் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெறும் என்று குறிப்பிட்ட அமைச்சரிடம் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியுண்டா? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.


இதற்கு மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு இதுவரையில் அனுமதி வழங்கவில்லை. தனியார் பாடசாலைகள் சர்வதேச பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சித்திரை விடுமுறைக்கு பின்னர் மேல் மாகாணத்தில் உள்ள குறிப்பிட்ட தர வகுப்பு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


பாடசாலைக்கான சித்திரை விடுமுறை தொடர்பில் குறிப்பிடுகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி விடுமுறை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.