ஜனாஸாக்களை அடக்கம் செய்யாது அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றது - பா. உ. ஹலீம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாஸாக்களை அடக்கம் செய்யாது அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றது - பா. உ. ஹலீம்

போதிய வழிகாட்டுதல்கள் இல்லை என தெரிவித்து உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கிய வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதை வேண்டுமென்று அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர் என எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

கண்டியில் ஊடகவியலாளர்களிற்கு கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் M. H. A.  ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.

உடல்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தாமதப்படுத்திவருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யார் என்பதை உள்ளுர் அதிகாரிகள் கண்டுபிடிக்க தவறியுள்ளதால் சர்வதேச விசாரைணகள் அவசியம் என எதிர்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு குறித்து மக்களிற்கு நம்பிக்கை காணப்பட்ட போதிலும் எனினும் அது எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு உண்மைகளை கண்டுபிடிக்கவில்லை என்பது அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் யார் உள்ளனர் யார் தற்கொலை குண்டுதாரிகளிற்கு உதவினார்கள் என்பதை மக்கள் அறிந்துகொள் விரும்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையால் நாடு திருப்தியடைய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.