போதைப்பொருள் தொடர்பில் எமக்கு தகவல் வழங்கினால் பெறுமதிமிக்க பரிசில்கள்! -பொலிஸ்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போதைப்பொருள் தொடர்பில் எமக்கு தகவல் வழங்கினால் பெறுமதிமிக்க பரிசில்கள்! -பொலிஸ்


போதைப்பொருள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பெறுமதி மிக்க சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்காக பொலிஸார் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


இந்நிலையில், பொலிஸ் போதைப் பொருள் பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு, திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரும் இது தொடர்பான சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


அதற்கமைய நேற்றைய தினம் மாத்திரம் நூற்றுக்கனக்கான சுற்றிவளைப்புகள் இடம்பெற்றிருந்ததுடன், இதன்போது நாடளாவிய ரீதியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். 


போதைப்பொருள் பாவனையின் காரணமாக இளைஞர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்ற நிலையில், அவர்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்திலேயே இத்தகைய சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.


போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்தே அதிகளவான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைகின்றன. இந்நிலையில் இவ்வாறு தகவல்களை வழங்கும் நபர்களுக்காக பெறுமதிமிக்க பரிசில்களை பெற்றுக் கொடுப்பதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானத்துள்ளது.  


அதற்கமைய போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றால் அதனை 119, 118 மற்றும் 1997 என்ற தொலைபேசி அழைப்புகளுக்கு தொடர்புக்கொண்டு தெரிவிக்க முடியும்.


இவ்வாறு வழங்கப்படும் தகவல்களில், முக்கியமான மற்றும் பாரிய சுற்றிவளைப்புகளை முன்னெடுப்பதற்கான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு, அவர்களது சேவையை பாராட்டும் வகையிலும், மேலும் அவர்கள் இத்தகைய தகவல்களை வழங்குவதற்காக ஊக்குவிக்கும் வகையிலும் பெறுமதிமிக்க பாராட்டு பரிசில்கள் வழங்கி வைக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார். 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.