பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் நெல்; நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் நெல்; நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க தீர்மானம்!


பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் நெல்லினை தேடி நாடாளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.


சிலர் அரிசியினை பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் விலையை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.


இதன் காரணமாகவே தற்போது அரிசியின் விலை சந்தையில் அதிகரித்துள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.


எனவே அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.


$ads={1}


சிலர் நெல்லினை அரிசியாக மாற்றாது மறைத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன.


எனினும் நெல்லினை பதுக்கி வைப்பதற்கு எதிரான சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள தமக்கு அதிகாரம் இல்லை என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.