நாட்டில் சரீஆ சட்டம் குறித்து கதைப்பதாயின் இலங்கையிலிருந்து வெளியேற வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் முஸ்லிம் தனியார் சட்டம் குறித்து, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
நாட்டில் தேச வழமை மற்றும் கண்டியர் உள்ளிட்ட பல்வேறு தனியார் சட்டங்கள் பின்பற்றப்படுகின்ற நிலையில், தாம் முஸ்லிம் தனியார் சட்டத்தை பின்பற்றி வருவதாக அவர் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த கருத்து தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டார்.
$ads={1}
“அவர் தெரிவித்த கருத்து, மத அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய கருத்தாகும். மத அடிப்படைவாதமே இறுதியில் தீவிரவாதம் வரை செல்கின்றது. ஷரீஆ சட்டத்தின்படி அவர் வாழ வேண்டும் எனில், சவூதி அரேபியாவுக்கே அவர் செல்ல வேண்டும். அவருக்கு இலங்கையில் இருக்க முடியாது. இலங்கையில் இருக்க வேண்டும் எனில், இலங்கை சட்டத்தின் படியே அவர் உள்ளிட்ட அனைவரும் செயற்பட வேண்டும்.
அனைவரும் இலங்கை சட்டத்தை மதிக்கும் போது, அவர் மாத்திரம் ஷரீஆ சட்டம் குறித்து கதைப்பது எனில், ஷரீஆ சட்டம் பின்பற்றப்படுகின்ற நாடொன்றுக்கே அவர் செல்ல வேண்டும். எமது நாட்டில் இருந்து கொண்டு சரீஆ சட்டம் குறித்து கதைக்க முடியாது. எவ்வாறாயினும் அவரைக் கைது செய்து, அவரின் கருத்துத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.” என்றார்.
வீடியோ: https://fb.watch/4cxfVi9LuL/