வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கவுள்ளதாகக் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் தனிப்பட்ட பாவனைக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் டொலரின் பெறுமானத்தைச் சேமிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வாகன இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வாகன இறக்குமதியின் போது நாட்டின் அபிவிருத்திக்கு முதலிடம் வழங்கும் வகையில் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மேலும் தெரிவித்தார்.