இலங்கையில் 23 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர்? வெளியான அதிர்ச்சி தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் 23 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர்? வெளியான அதிர்ச்சி தகவல்!


இலங்கையில் 23,204 பெண்கள் காணாமல் போயுள்ளமை பற்றிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த 05 வருடக் காலப்பகுதியில் இவர்கள் காணாமல் போயிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகள் கூறுகின்றன.


அண்மையில் கொழும்பு டாம் வீதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட தலையற்ற உடல் சார்ந்த விசாரணையின் ஆரம்பத்தில் பொலிஸார், உடலை அடையாளம் காண்பதற்காக பொதுமக்களை நாடியிருந்தனர்.


அந்த சந்தர்ப்பத்தில் சுமார் 200ற்கும் அதிகமான அழைப்புக்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் பொலிஸாருக்கு கிடைத்திருந்தன.


இந்நிலையில், பொலிஸாரின் பதிவுகளில் குறிப்பாக 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 23,204 பெண்கள் காணாமல் போயுள்ளமை பற்றி முறைப்பாடுகள் குவிந்திருக்கின்றன.


அதற்கமைய 2020ஆம் ஆண்டில் 3,716 முறைப்பாடுகள் பதிவாகியிருக்கின்றன.


2019ஆம் ஆண்டில் 3,425 முறைப்பாடுகளும், 2018ஆம் ஆண்டில் 3,325 முறைப்பாடுகளும் பொலிஸாருக்கு கிடைத்திருக்கின்றன.


2017ஆம் ஆண்டில் 3,617 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், 2016 ஆம் ஆண்டில் 4,420 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


$ads={1}


2015ஆம் ஆண்டிலேயே அதிக முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவை 4701ஆக காணப்படுகின்றன.


இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் சில முறைப்பாடுகள் காணாமல் போனோர் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் பொலிஸாரின் பதிவுப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.