மாணவியொருவர் அவசர தேவையொன்றுக்கான பதிலை பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லை கல்வி அமைச்சுக்கு 185 தடவைகள் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்ட நிலையில், 186வது தொலைபேசி அழைப்பின் போதே, பதில் கிடைத்துள்ளதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது.
அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர் நேற்றைய தினம் (12) இவ்வாறு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார்.
நேற்று காலை முதல் மாலை வரை மேற்கொண்ட முயற்சியின் ஊடாகவே, 186ஆவது தொலைபேசி அழைப்புக்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
கல்வி அமைச்சின் உரிய பிரிவினரை தொடர்புக்கொள்வதற்கு காலை 9.00 மணி முதல் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், 185 அழைப்புக்களுக்கு எந்தவொரு நபரும் ஏற்கவில்லை என கூறப்படுகின்றது.
$ads={1}
குறித்த மாணவி, மூன்று தொலைபேசிகளின் ஊடாக கல்வி அமைச்சை தொடர்புக் கொள்ள முயற்சித்துள்ளதாக அறிய முடிகின்றது.
எனினும், 186வது அழைப்பை ஏற்க பெண் அதிகாரியொருவர், குறித்த மாணவிக்கு பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Source: https://divaina.com/daily/index.php/puwath-2/55657-2021-03-12-13-32-61