அடுத்த வாரம் பாடசாலைகள் எதுவும் மீள் திறக்கப்படமாட்டாது! -கல்வி அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடுத்த வாரம் பாடசாலைகள் எதுவும் மீள் திறக்கப்படமாட்டாது! -கல்வி அமைச்சர்


சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக சாதாரண தர பரீட்சை நிறைவடைந்த பின்னர் தரம் 1 தொடக்கம் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்ட பாடசாலைகளும் மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.


சாதாரண தர பரீட்சை நிறைவடைந்த பின்னர் மேல் மாகாண பாடசாலைகளை திறப்பது பொருத்தமானது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


கொழும்பில் இன்று (10) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மார்ச் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறுவதற்கு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அத்தோடு இதன் பின்னர் மார்ச் 15 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் சுகாதார அதிகாரிகளின் அனுமதிக்கு உட்பட்ட வகையில் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் அனைத்து தரங்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


இதற்கு முன்னர் பெப்ரவரி 15 ஆம் திகதி தொடக்கம் நாட்டில் அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் கழுத்துறை மாவட்டங்களில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழுவின் சிபாரிசுகளை பெற்றுக்கொள்வதற்கு கல்வி அமைச்சினால் சமீபத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இந்த குழுக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களுக்கு அமைய மேல் மாகாணத்தில் பெரும்பாலான பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் இறுதி தீர்மானத்தின் அடிப்படையிலேயே ஆகும்.


இதற்கமைவாக வைத்தியர் அசேல குணவர்தனவின் தீர்மானத்திற்கு அமைய மேல் மாகாணத்தில் பாடசாலைகளை திறப்பது மிகவும் பொருத்தமானது என தீர்மானிக்கப்பட்டது.


சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளில் இதற்கு அமைவாக மார்ச் 15 ஆம் திகதி திறக்கப்படும் தரம் 1 இல் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கு அன்றைய தினம் பாடசாலைகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.