ஜனாஸா அடக்க அனுமதி உடனடியாக செயற்படுத்தப்படுமென்று நம்புகிறேன்! அமெரிக்க தூதுவர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாஸா அடக்க அனுமதி உடனடியாக செயற்படுத்தப்படுமென்று நம்புகிறேன்! அமெரிக்க தூதுவர்


இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதை அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் வரவேற்றுள்ளதோடு, நீண்ட கால தாமதத்தின் பின்னரான தீர்மானம் என்பதையும் ஒரு ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு மேலும் துன்பம் கொடுப்பதைத் தவிர்த்து, அடக்கம் செய்யும் நடவடிக்கையை காலதாமதமின்றி செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.