இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய கலவரம்! மறைக்கப்படுவது ஏன்? சர்ச்சையை கிளப்பும் அமைச்சர் வாசுதேவ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய கலவரம்! மறைக்கப்படுவது ஏன்? சர்ச்சையை கிளப்பும் அமைச்சர் வாசுதேவ!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றதாகும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். 


இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,


அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டிய பிரதான காரணி தொடர்பில் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிறிதொரு விடயம் என்ன என்பதே இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.


அதாவது MCC ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக, நடைபெறவிருந்த தேர்தலை நோக்காக கொண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் பிறிதொரு சிவில் கலவரத்தை உண்டாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்பது தொடர்பில் ஆராயப்பட்டிருக்க வேண்டும்.


$ads={1}


சஹ்ரான் மற்றும் அவர் சார்ந்தவர்களுக்கு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வது மாத்திரமே இலக்காக காணப்பட்டது.


ஆனால் அந்த தாக்குதலுடன் நாட்டிலுள்ள கத்தோலிக்க, சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய கலவரத்தை ஏற்படுத்தி அடுத்தடுத்த கட்டத்தில் என்ன நடக்கும் என்பதை சஹ்ரான் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


எனவே இது போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த அறிக்கையில் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. அதன் காரணமாகவே இதனை முழுமையற்ற அறிக்கையாக நாம் கருதுகின்றோம் என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.