கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் உட்பட மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அநாமதேய கடிதம் (மொட்டை கடிதம்) ஒன்று கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் துறைமுக பொலிஸாரிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக குறித்த சிலரினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புலனாய்வு விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.