அமெரிக்காவின் துப்பாக்கிச் சூடு; ஐந்து குழந்தைகள் உற்பட 6 பேர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்காவின் துப்பாக்கிச் சூடு; ஐந்து குழந்தைகள் உற்பட 6 பேர் பலி!

அமெரிக்காவின் ஒக்லஹோமாவின் துல்சாவில் இருந்து தென்கிழக்கே 72 கி.மீட்டர் தொலைவில் உள்ள முஸ்கோஜீ என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.


உடனடியாக விரைந்த பொலிஸார் அந்த வீட்டில் சென்று பார்க்கும்போது இரத்த வெள்ளத்தில் நான்கு குழந்தைகள் உற்பட ஐந்து பேர் உயிரிழந்து கிடந்தனர். ஒரு குழந்தை படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.


அப்போது துப்பாக்கியுடன் வீட்டில் ஒருவர் நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.


பின்னர் பொலிஸார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் பெயரை வெளியிடப்படவில்லை. அதேபோல் உயிரிழந்தவர்களின் விவரத்தையும் வெளியிடவில்லை.


பொலிஸ் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர்தான், துப்பாக்கிச்சூட்டிற்கான முழு விவரம் தெரியவரும் என அறிய முடிகிறது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.