பாடசாலை சீருடை வவுச்சர்கள் காலாவதியாகும் திகதி நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை சீருடை வவுச்சர்கள் காலாவதியாகும் திகதி நீடிப்பு!


2020 ஆம் ஆண்டு தரம் 1 மாணவர்களுக்காக விநியோகிக்கப்பட்ட சீருடைகளுக்கான வவுச்சர்களுக்குரிய காலாவதி திகதி பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை, முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டமை, வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தமையால் பாடசாலை சீருடைகளை பெற்றுக்கொள்ள முடியாமற்போயுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு சீருடைகளுக்கான வவுச்சர்களின் காலாவதி திகதியை நீடிக்க தீர்மானித்ததாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.