பிரதமரை சந்தித்த ஒருங்கிணைப்பு செயலாளருக்கு கொரோனா உறுதி - பிரதமருக்கும் கொரோனா???

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமரை சந்தித்த ஒருங்கிணைப்பு செயலாளருக்கு கொரோனா உறுதி - பிரதமருக்கும் கொரோனா???

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் அரசியல் விவகாரம் தொடர்பான ஒருங்கிணைப்புச் செயலாளர் குமாரசிறி ஹெட்டிகே கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலைமையில், பிரதமருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பிரதமர் செயலகத்தின் தலைமை அதிகாரி யோஷித்த ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றாளர் என கண்டறியப்பட்டுள்ள குமாரசிறி ஹெட்டிகே, பிரதமரை இறுதியாக 10 தினங்களுக்கு முன்னரே சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


$ads={2}

ஹெட்டிகேவுடன் நெருங்கி செயற்பட்ட பிரதமர் செயலகத்தின் மூன்று அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களும் பிரதமருடன் நெருங்கி பணியாற்றவில்லை எனவும் யோஷித்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளளார்.

அத்துடன் ஹெட்டிகேவுக்கு அலரி மாளிகையில் அலுவலகம் இல்லை. பிரதமரின் ஊழியர்கள் குழுவில் பணியாற்றும் நபர்களுக்கு வாராந்தம் PCR பரிசோதனை நடத்தப்பட்டு, கடும் சுகாதார சட்டத்திட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.