சவூதி அரேபியாவின் எல்லைகள் மீள் திறப்பு; சர்வதேச விமானங்களுக்கு அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சவூதி அரேபியாவின் எல்லைகள் மீள் திறப்பு; சர்வதேச விமானங்களுக்கு அனுமதி!


சவூதி அரேபியா தனது எல்லைககளை இன்று (03) மீளத் திறந்துள்ளதுடன் சர்வதேச விமானங்களின் வருகைக்கு மீள அனுமதி அளித்துள்ளது.


புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 21ஆம் திகதி முதல் சர்வதேச விமானங்களுக்கு சவூதி அரேபியா தடை விதிக்கப்பட்டதுடன் வெளிநாடுகளுக்கான தரை வழியான போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டன.


$ads={2}


இந்நிலையில்,  இன்று முதல் சவூதி அரேபியாவுக்கான சர்வதேச விமானங்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


புதிய வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீக்குவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என சவூதி அரேபிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்நிலையில், சவூதி அரேபியாவில் 360,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களில் 6,200 பேர் இறந்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.