நாட்டின் இன்றைய வானிலை; வளிமண்டளவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் இன்றைய வானிலை; வளிமண்டளவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

$ads={2}

அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.