நஞ்சு வைத்து சிறுத்தையினை கொன்ற நால்வர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நஞ்சு வைத்து சிறுத்தையினை கொன்ற நால்வர் கைது!

மாத்தளை – ரஜ்ஜமன நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை, கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கே உரித்தான குறித்த சிறுத்தைக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக மாத்தளை வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர், பி.எம்.பி. விஜேகோன் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}

சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களிடமிருந்து 5 புலிப்பற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாத்தளை பிரதேச சபைக்குட்பட்ட ரஜ்ஜம்மன நீர்த்தேக்க அணைக்கட்டில் 3 அடி உயரமும், 5 1/2 அடி நீளமுமான இலங்கைக்கே உரித்தான சிறுத்தையொன்றின் உடல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் வனஜீவராசி அதிகாரிகளும் கால்நடை வைத்தியர்களும் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் CCTV காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக மாத்தளை வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர், பி.எம்.பி. விஜேகோன் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.