ஐந்து வயது குழந்தையை வன்புணர்விற்கு உட்படுத்திய 41 வயது தந்தை கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐந்து வயது குழந்தையை வன்புணர்விற்கு உட்படுத்திய 41 வயது தந்தை கைது!

ஐந்து வயது சிறுமியொருவரை மனிதாபிமானமற்ற முறையில் வன்புணர்விற்கு உட்படுத்தியமை தொடர்பில் 41 வயதான இரு பிள்ளைகளின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் தனது மனைவியை விட்டுப் பிாிந்தவரென்பதோடு வன்புணர்விற்கு உட்படுத்திய சிறுமியின் தந்தைக்குச் சொந்தமான தோட்டமொன்றில் நீண்டகாலமாக பணிபுாிந்து வருபவரென்பதும் தொிய வந்துள்ளது.


$ads={2}


பாதிக்கப்பட்ட சிறுமி இறக்வானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் யாருமற்ற வேளையில் குறித்த சிறுமியை ஏமாற்றி அருகிலுள்ள புதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தொிய வந்துள்ளது.


மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இறக்வானை பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.