துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளை; 21 வயது குடும்பப் பெண் படுகாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளை; 21 வயது குடும்பப் பெண் படுகாயம்!

யாழ். செம்பியன்பற்று வடக்கு, முனை பகுதியில் துப்பாக்கி முனையில் மிரட்டி பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளையிட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


இதன்போது சு. டேனுஜா (வயது 21) என்ற குடும்ப பெண் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நேற்று இரவு எட்டு பேர் கொண்ட கும்பலொன்று தம்மை பொலிஸார் என கூறி, வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குடும்ப பெண்ணை அச்சுறுத்தியதுடன், கழுத்தையும் அறுத்துள்ளனர்.


இதன்போது வீட்டில் இருந்த 25 பவுண் நகை மற்றும் 83 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.


இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நபரொருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரிடம் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.